Thursday, March 8, 2012

தினம் ஒரு திருமந்திரம்- 08/03/2012

             உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
            உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன்.
            உடம்புளே உத்தமன் கோயில்கொண்டான் என்று
            உடம்பினை யானிருந்து தோம்புகின் றேனே.

தனது நிலையை தெள்ளத்தெளிவாக்கி ஹதயோகத்தின் அவசியமும் உடலை நன்மையாக காக்க வேண்டியதின் அவசியத்தையும் கூறுகிறார். உடலின் உள்ளே இறைவன் வசிக்கிறார். அதனால் உடலை பேணிக்காப்பது அவசியம். உடல் இறைவன் வசிக்கும் கோவில் என்பதால் உடலை கவனிக்க தவறுவது கோவிலை சரியாக பராமரிப்பு இல்லாமல் வைத்திருக்கும் பாவத்திற்கு சமமானது. திருமூலர் இதனால் உடலை நான் இங்கே மேம்படுத்துகிறேன் என்கிறார்.

No comments:

Post a Comment