Thursday, March 29, 2012

தினம் ஒரு திருமந்திரம்- 29/03/2012


                   வளியினை வாங்கி வயத்தில் அடக்கில்
                   பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பஞ்சாம்
                  தெளியக் குருவின் திருவருள் பெற்றால்
                  வளியினும் வேட்டு அளியனும் ஆமே.

பொருள் : சாதகர் காற்றை இழுத்துத் தன் வசப்படுத்தி அடக்கியிருந்தால், உடம்பு பளிங்கு போன்று மாசின்றித் தூயதாய் அது முதுமை எய்தினும் இளமைத் தன்மை உண்டாகும். இதனைத் தெளிய குருவின் அருளையும் பெற்றுவிட்டால் அவர் உடம்பானது காற்றைவிட மென்மை யுடையதாகி, எங்கும் செல்லும் ஆற்றல் பெற்று மேன்மையடைவர்.

No comments:

Post a Comment